top9 NEWS
ஈரானின் இராணுவம் அமைதியாக இருக்க தாக்குதல் நடத்துவது யார்?
World

Read Story

Mar 135 min read

ஈரானின் இராணுவம் அமைதியாக இருக்க தாக்குதல் நடத்துவது யார்?

புரட்சியை ஏற்படுத்துவதை விட அதை பாதுகாப்பதே கடினமான பணி. பொதுவாக, ஒரு நாட்டை பாதுகாக்க இராணுவத்தை கட்டமைப்பார்கள். இங்கே புரட்சியை பாதுகாக்க மற்றொரு படை கட்டமைக்கப்பட்டது. (Islamic Revolutionary Guard Corps – IRGC) ‘இஸ்லாத்தின் வீரர்கள்’ என்று கொமைனி வர்ணித்தார். நாட்டின் இராணுவத்திற்கு இணையான படை என்று கூறப்பட்டாலும் நாட்டின் அதிபரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படாமல் சுப்ரீம் லீடர் கட்டுப்பாட்டின் கீழ் இந்த படை செயல்படுகிறது. புரட்சிக்கு பின்னர் அதி உயர் தலைவராக பதவியேற்ற ஆயத்துல்லாஹ் கொமைனியின் திட்டத்தில் உதயமானதே இந்த படை என்று கூறப்படுகிறது. IRGC-யில் மொத்தம் இரண்டு இலட்சம் படையினரும் ஆறு இலட்சம் ரிசர்வ் படையினரும் உள்ளதாக கூறப்படுகிறது. இராணுவத்தை போன்றே தரைப்படை, விமானப்படை, கப்பல்படை என முப்படைகளை IRGC கொண்டுள்ளது பேலிஸ்டிக் ஏவுகணை திட்டம், அணு சக்தி திட்டம், ஹிஸ்புல்லாஹ் போன்ற வெளிநாட்டு படைகளுடன் தொடர்பு ஆகிய முக்கிய விவகாரங்களை IRGC கவனித்து வருகிறது. -Riaz Ahamed

ஈரான் தாக்குதல்: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
World

Read Story

Mar 25 min read

ஈரான் தாக்குதல்: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

ஓமனின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஓமன் வளைகுடா பகுதியில் மஸ்கட் நகர கடலோரத்தில், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதனை வெடிகுண்டுகளுடன் கூடிய ஒரு டிரோன் இன்று கடுமையாக தாக்கியது என தெரிவித்து உள்ளது. ஈரானின் ட்ரோன் படகு மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஓமனின் எண்ணெய் கப்பல் சிதிலமடைந்தது. 16 இந்தியர்கள் உட்பட 21 பேருடன் சென்ற எண்ணெய் கப்பலின் எஞ்ஜின் அறையில் பணியாற்றிய இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர்.

துரோகிகளால் கொல்லப்பட்டார் அயத்துல்லா அலி கமேனி
World

Read Story

Mar 15 min read

துரோகிகளால் கொல்லப்பட்டார் அயத்துல்லா அலி கமேனி

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு ராணுவத் தாக்குதல் மற்றும் உள்நாட்டு துரோகத்தால் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மரணம் அடைந்தார். அவரது மகள், மருமகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் உயிரிழந்தனர். இதை அந்நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது. அவரது மறைவை அடுத்து 7 நாட்கள் பொது விடுமுறையும், 40 நாட்கள் துக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமேனி உயிரிழந்ததை அடுத்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி), இமாமைக் கொன்றவர்களுக்கு கடுமையான மற்றும் வருந்தத்தக்க தண்டனையை ஈரான் வழங்கும். அவர்களை ஒருபோதும் விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேலை விட்டு வெளியேறினார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
World

Read Story

Feb 285 min read

இஸ்ரேலை விட்டு வெளியேறினார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் அதன் சர்வதேச வான் பரப்பை மூடியுள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேலும், டெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு, ஈரான் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது அலை, அலையாய் ஏவுகணைகளை வீசிய ஈரான், தற்போது பாலிஸ்டிக் & டிரோன் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரான் தாக்குதல் தீவிரமடைவதாக கூறப்படும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்றம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நெவாடிம் விமானப்படை தளத்தில் இருந்து இஸ்ரேல் பிரதமர் & அதிபர் பயணிக்கும் தனி விமானம் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

வரும் 17ம் தேதி வங்கதேச பிரதமராக பதவியேற்கிறார் தாரிக் ரஹ்மான்
World

Read Story

Feb 155 min read

வரும் 17ம் தேதி வங்கதேச பிரதமராக பதவியேற்கிறார் தாரிக் ரஹ்மான்

வங்கதேசத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஹுமாயூன் கபீர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்திய - வங்கதேச உறவை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். இவ்விஷயத்தில், வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் தனது பேட்டியில், பிஎன்பியின் மகத்தான தேர்தல் வெற்றியை அடுத்து வங்கதேசத்தில் மாறி இருக்கும் அரசியல் யதார்த்தத்தை அங்கீகரிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. நாட்டின் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தாரிக் ரஹ்மான் கவனம் செலுத்துவார். இங்கு நிலைமைகள் சீரானவுடன், இந்திய வருகை உட்பட சர்வதேச பயணங்களை அவர் மேற்கொள்வார். மக்களின் வலுவான ஆணைக்கு இணங்க, வலுவான நிலையில் இருந்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

விபத்தில் இறந்த இந்திய மாணவி குடும்பத்துக்கு ரூ.262 கோடி
World

Read Story

Feb 135 min read

விபத்தில் இறந்த இந்திய மாணவி குடும்பத்துக்கு ரூ.262 கோடி

இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜானவி கன்டுலா, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தகவல்தொழில்நுட்பப் படிப்பு படித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு இவர் சியாட்டில் நகர சாலையை கடக்கும் போது, சைரன் ஒலியுடன் அவசரமாக சென்ற போலீஸ் வாகனம் மோதியது. இதில் ஜானவி கன்டுலா உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு சியாட்டில் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஜானவி குடும்பத்தினருக்கு 29 மில்லியன் டாலர் (ரூ.262 கோடி) இழப்பீடு வழங்க கிங் மாகாண உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் வாகனத்தை கவனக் குறைவாக ஓட்டிய கெவின் டேவ்-க்கு 5,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

புரட்டிப் போட்ட கெஸானி புயல்! 20 பேர் பலி!
World

Read Story

Feb 115 min read

புரட்டிப் போட்ட கெஸானி புயல்! 20 பேர் பலி!

உலகின் 4 ஆவது மிகப் பெரிய தீவான மடகாஸ்கர் நாட்டின் கடல்பகுதியில் உருவான கெஸானி புயலால் அந்நாட்டின் கிழக்கு நகரமான டோமாசினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 10) மாலை முதல் அதிக கனமழை பெய்து வருகின்றது. சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கும் டோமாசினா நகரத்தில், கெஸானி புயலின் பாதிப்புகளால் 20 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 33 பேர் படுகாயமடைந்ததுடன், சுமார் 15 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட டோமாசினாவை மடகாஸ்கர் அதிபர் மைக்கேல் ராண்ட்ரியானிரினா நேரில் பார்வையிட்டார். அந்த நகரத்தின் 75 சதவிகித கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

IND - PAK war நிறுத்தியது நான் : மறுக்க முடியாது டிரம்ப்
World

Read Story

Feb 115 min read

IND - PAK war நிறுத்தியது நான் : மறுக்க முடியாது டிரம்ப்

அமெரிக்காவில் நேர்காணலுக்கு பேட்டியளித்த டிரம்ப், இதுவரை 8 போர்களை தலையிட்டு நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதில் 6 போர்கள் வரி விதிப்பின் மூலம் சாத்தியமாகியுள்ளதாகவும் கூறினார். கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை 80 முறை பல்வேறு இடங்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில், மூன்றாவது நபரின் தலையீடு இல்லை என இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.